×

நெல்லை- திருச்செந்தூர் இடையே நாளை முதல் வழக்கம் போல் ரயில் சேவை

நெல்லை: நெல்லை- திருச்செந்தூர் இடையே நாளை முதல் வழக்கம் போல் ரயில் சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர்-நெல்லை இடையே அமைந்துள்ள ரயில் பாதை, கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ரயில் சேவையை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி -நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்று இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு செல்கிறது. நாளை முதல் பயணிகள் ரயில் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post நெல்லை- திருச்செந்தூர் இடையே நாளை முதல் வழக்கம் போல் ரயில் சேவை appeared first on Dinakaran.

Tags : Nella ,Tricendur ,Tricendoor-Nell ,17 ,Andeti ,Dinakaran ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது