×

தூத்துக்குடியில் மீன்கள் விலை கடும் உயர்வு: விலையை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்க மக்கள் ஆர்வம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக கடந்த 15 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்களின் வரத்து குறைவாக உள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சீலா மீன் ரூ.800க்கும் விற்கும் நிலையில் இன்று ரூ.1,300 வரை விற்பனையாகிறது. விலை மீன் ரூ.350க்கு விற்பனையாகும் நிலையில் இன்று ரூ.600 வரை விற்கப்படுகிறது.

சால மீன் ரூ.1500 முதல் ரூ.1800 வரை விற்கப்படும் நிலையில் ரூ.3,000 வரை விற்கப்படுகிறது. நண்டு விலை ரூ.2000க்கு விற்பனையாகும் நிலையில் இன்று ரூ.4,000க்கு விற்பனையாகிறது. மேலும், ஊளி உள்ளிட்ட மற்ற மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே மீன்கள் அதிகமான விலைக்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால் சற்று மீனவர்கள் கவலை அடைந்தாலும் கிடைத்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றனர். நாளை விடுமுறை தினம் என்பதால் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்க திரேஸ்புரம் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

The post தூத்துக்குடியில் மீன்கள் விலை கடும் உயர்வு: விலையை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Threspuram ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது