×

கலவை அருகே மாயமான செவிலியர் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு

*போலீசார் விசாரணை

கலவை : கலவை அருகே மாயமான செவிலியர் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர் கிராமம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த கணேச மூர்த்தி விவசாயி. இவரது மனைவி விமலீஸ்வரி. இவர்களுக்கு வசந்தகுமார்(26), பிரியங்கா(23) ராஜசேகர்(20), என 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். மகள் பிரியங்கா நர்சிங் முடித்துவிட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

பிரியங்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காலைக்கடன் முடிப்பதற்காக அருகே உள்ள வயலுக்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்துள்ளனர். எங்கும் கிடைக்காததால் நேற்று முன்தினம் கலவை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே பிரியங்காவின் செருப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன், தலைமையில் நேற்று முன்தினம் மாலை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். பின்னர், இரவு நேரமானதால் தேடும் பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை விவசாய கிணற்றில் பெண் சடலம் இருப்பதாக கலவை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கலவை தீயணைப்பு நிலைய அலுவலகம் பாஸ்கரன், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர்.

பின்னர், கலவை சப் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் சடலத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பிரியங்கா கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post கலவை அருகே மாயமான செவிலியர் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ganesa Murthy Farmer ,Anjaneyar Temple Street ,Mazhaiur ,Ranipettai district ,Dinakaran ,
× RELATED வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை...