×

நடுங்க வைத்த குளிரால் பொதுமக்கள் அவதி

வேப்பனஹள்ளி, ஜன.6: வேப்பனஹள்ளி பகுதியில் நடுங்க வைத்த குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், குளிர்காலங்களில் வழக்கமாக அதிகப்படியான குளிர் காணப்படும். குளிரின் காரணமாக பொதுமக்கள் போர்வைகள் போர்த்தியபடியும், ஸ்வெட்டர் மற்றும் குல்லாய் சகிதாமாக தென்படுவார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது தூரல் மழை பெய்தவாறு இருந்தது. இதையடுத்து, கடும் குளிர் வாட்டியெடுத்ததால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

The post நடுங்க வைத்த குளிரால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Veppanahalli ,Dinakaran ,
× RELATED போலந்து நாட்டு பெண்ணுடன் கிருஷ்ணகிரி...