×

ஓடும் பஸ்சில் இருந்து விழுந்து பெண் காயம்

தக்கலை, ஜன.6: தக்கலையை அடுத்த காட்டாத்துறை மஞ்சாடியை சேர்ந்தவர் ரோஸ்மேரி (53). நாகர்கோவில் செல்வதற்கு பஸ் ஏற இரவிபுதுார்கடை பஸ்ஸ்டாப் வந்தார். அங்கிருந்து நாகர்கோவிலுக்கு பஸ் ஏறினார். பஸ்சில் வைத்து டிக்கெட் எடுக்க பர்சில் இருந்து பணம் எடுக்கும் போது நிலை தடுமாறி அவர் பஸ்சின்முன் படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார், இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஓடும் பஸ்சில் இருந்து விழுந்து பெண் காயம் appeared first on Dinakaran.

Tags : Thakkalai ,Rosemary ,Kattura ,Manjadi ,Iraviputurgadai ,Nagercoil ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலி பத்மநாபபுரம்...