×

நடிகர் விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு: கிரிமினல் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதிமன்றம் ஆணை!!

டெல்லி: தன் மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணையை நடிகர் விஜய் சேதுபதி சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி தாக்கிக்கொண்ட விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தன் மீதான விசாரணைக்கு தடைகோரி நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இருதரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காணும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க அறிவுறுத்தப்பட்டதே அது என்ன ஆனது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக இருதரப்பிலும் கூறப்பட்டது. மேலும் தன்னை பற்றி எதிர்தரப்பினர்தான் அவதூறு பரப்பியதாக விஜய்சேதுபதி தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் மேல்முறையீட்டு மனு தொடர்பாக உச்சநீதிமன்றம், பரஸ்பரம் பேச்சுவாத்தை தோற்றதால் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விஜய் சேதுபதி தன் மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post நடிகர் விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு: கிரிமினல் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதிமன்றம் ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Vijay Sethupathi ,Supreme Court ,Delhi ,Maha Gandhi ,Chennai ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...