×

புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நண்பனுக்கு கஞ்சா கொடுக்க முயன்றவர் கைது

செங்குன்றம்: புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நண்பனுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் சிறையில் உள்ள நண்பன் மெகபூல்பாஷா என்பவருக்கு அருண்குமார் கஞ்சா கொடுக்க முயன்றுள்ளார் . பார்வையாளர் அறை வழியே டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலத்தில் கஞ்சாவை வைத்து வீச முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

The post புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நண்பனுக்கு கஞ்சா கொடுக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Investigation Jail ,Senggunram ,Arunkumar ,Arun Kumar ,Megabulpasha ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு