×

வெள்ள நிவாரண தொகை ஒன்றிய அரசு வழங்க கோரி விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்,ஜன.5: மழையால் பாதித்த மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகையை ஒன்றிய அரசு வழங்க கோரி நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருட்செல்வன் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் நாகைசாதிக், மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன், தொகுதி செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ், மாநில தேர்தல் பணிக்குழு ஆக்கூர் செல்வ அரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடராக அறிவித்து, ரூ.21 ஆயிரம் கோடி நிவாரணம் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு முறையை ரத்து செய்துவிட்டு வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post வெள்ள நிவாரண தொகை ஒன்றிய அரசு வழங்க கோரி விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vishik Party ,Union Government ,Nagapattinam ,Liberation Tigers Party ,Nagapattinam Head Post ,Office ,District Secretary ,Arutselvan ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...