×

ரூ.8 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் மயிலாடுதுறை, சீர்காழி வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

மயிலாடுதுறை,ஜன.5: மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வருவாய் கோட்டங்களில் 2024 ஜனவரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 11ம்தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மற்றும் சீரகாழி வருவாய் கோட்டங்களில் 2024 ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் ஆர்டிஓ தலைமையில் வரும் 11ம்தேதி காலை 10.30 மணியளவில் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீரகாழி கோட்டத்தை சார்ந்த அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு. மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post ரூ.8 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் மயிலாடுதுறை, சீர்காழி வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Sirkazhi ,District Collector ,Mahabharathi ,Sirkazhi Revenue ,Sirkazhi Revenue Zone Farmers Grievance Meeting ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் அரசு...