×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு அனைத்து சமூகம் அடங்கிய குழு: கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, அவனியாபுரத்தைச் ேசர்ந்த முனியசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அவனியாபுரத்தில் மாவட்ட நிர்வாகம் மட்டுமே ஜல்லிக்கட்டை நடத்துகிறது. வரும் 15ம் தேதி அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு அனைத்து சமூகத்தையும் சேர்த்து விழா குழு அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ் ண குமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், மனுவிற்கு கலெக்டர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு அனைத்து சமூகம் அடங்கிய குழு: கலெக்டர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : All-Community Committee for Avaniyapuram Jallikattu ,Madurai ,Yesarantha Muniyaswamy ,Avaniyapuram, Madurai ,ICourt ,Jallikattu ,Avaniyapuram ,All Community Committee for Avaniyapuram Jallikattu ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை