×

திருவில்லிபுத்தூரில் பழைய இரும்புக் கடையில் தீ: ரூ.10 லட்சம் பொருட்கள் நாசம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் பழைய இரும்புக் கடையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள மதுரை சாலையில் பழைய இரும்புக் கடை உள்ளது. இக்கடையில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

புகை குபுகுபுவென வெளியேறி அப்பகுதியே புகை மூட்டமானது. இது குறித்து தகவலறிந்து வந்த திருவலிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி முத்துச்செல்வம் தலைமையிலான வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினரும், நகர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடை உரிமையாளர் முத்துராமலிங்க குமார் கூறுமையில், ‘கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவில்லிபுத்தூரில் பழைய இரும்புக் கடையில் தீ: ரூ.10 லட்சம் பொருட்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputur ,Madurai Road ,Thiruvilliputur, Virudhunagar district ,Old Iron Shop ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை