×

எண்ணூரில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு

சென்னை : எண்ணூரில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. உர ஆலையை மூடக்கோரி 8வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், 34 கிராம நிர்வாகிகளிடம் ஆட்சியர் மற்றும் காவல் இணை ஆணையர் குறைகளை கேட்டறிந்தனர். அம்மோனியா கசிவு எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் கண்காணிக்கப்படும் என்றும் மீனவர்களின் கோரிக்கைகள் முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.

The post எண்ணூரில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Ennore ,CHENNAI ,Joint ,Commissioner ,of Police ,
× RELATED மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது