×

காஞ்சிபுரத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிக்கு சிகிச்சை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகளின் கூட்டாளி கார்த்திக், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ம் தேதி காஞ்சிபுரத்தில் ரவுடி பிரபாகரன் கொலை வழக்கில் தொடர்புடைய ரகுவரன், கருப்பு அசேன் என்கவுன்டர் செய்யப்பட்டனர். ரவுடி பிரபாகரன் கொலை வழக்கில் தொடர்புடையவரும் ரகுவரன், அசேன் கூட்டாளியுமான கார்த்திக் கோர்ட்டில் சரணடைந்தனர். புழல் சிறைக்கு காஞ்சிபுரம் கார்த்திக்கை போலீசார் கொண்டு செல்லும்போது வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிக்கு சிகிச்சை..!! appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Karthik ,Stanley Hospital ,Raghuvaran ,Rowdy Prabhakaran ,Karupu Asane ,Prabhakaran ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...