×

டூவீலர் மோதி தொழிலாளி பலி

சேந்தமங்கலம், ஜன.3: எருமப்பட்டி அடுத்துள்ள அலங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(46), கூலி தொழிலாளியான இவர், தன் தாயாருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அலங்காநத்தம் பிரிவு பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜா தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் -பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Raja ,Alanganantham ,Erumapatti ,Alankanattam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை