×

டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, ஜன.3: தெலங்கானா மாநிலம் ஆசீப் நகர் மண்டலம் அடுத்த பாபு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம்(37). இவர், கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகே தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு குந்தாரப்பள்ளி- வேப்பனஹள்ளி சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பல்லேரிப்பள்ளி அருகே சென்றபோது, திடீரென நிலை தடுமாறி டூவீலரில் இருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த மாணிக்கத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Manikam ,Babupet ,Asif Nagar ,Telangana ,Guruparapalli ,Kundarapalli-Veppanahalli road ,
× RELATED விளம்பரத்துக்காக வழக்கு தாக்கல்…...