- இந்திய கம்யூனிஸ்ட் கொடி ஓயிடுதல் விழா
- பின்னாத்தூர்
- முத்துப்பேட்டை
- முத்துபேட்டை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்
- துணை ஜனாதிபதி
- தெட்சிணாமூர்த்தி
- கட்சிக் கொடி
- திருமூர்த்தபோண்டி
- பின்னத்தூர்
முத்துப்பேட்டை,ஜன.2: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் நினைவு கொடியேற்று விழா முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கட்சி கொடியை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஏற்றி வைத்தார்.
இதில் மாநில குழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகையன், ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் மார்க்ஸ், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பரிமளா, ஒன்றியக்குழு உறுப்பினர் அறிவழகன், கிளை செயலாளர் அருணகிரி, துணைச்செயலாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post முத்துப்பேட்டையை அடுத்த பின்னத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கொடியேற்று விழா appeared first on Dinakaran.