×

திருமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி அறிவிப்பு: வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம்

 

திருமங்கலம், ஜன. 3: திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டத்தில் திருமங்கலம் நகர், தாலுகா, ஆஸ்டின்பட்டி, கூடக்கோவில், சிந்துபட்டி, கள்ளிக்குடி மற்றும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் என 7 ஸ்டேஷன்கள் அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக திருமங்கலம் நகர் மற்றும் ஆஸ்டின்பட்டி, தாலுகா, கள்ளிக்குடி, சிந்துபட்டி உள்ளிட்ட அனைத்து ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

எஸ்பி உத்தரவுபடி தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். திருமங்கலம் நகரில் முக்கிய தெருக்களான மதுரை ரோடு, உசிலம்பட்டி ரோடு, சோழவந்தான் ரோடு, ஜவகர்நகர், புதுநகர், உத்தண்டன்தெரு, கொடிமரத்தெரு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருமங்கலம் போலீசார், குற்ற சம்பவங்களை தடுக்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக திருமங்கலம் உட்கோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்லும் போது தங்களது வீட்டின் முகவரியை அருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் கூறி பதிவு செய்து செல்ல வேண்டும். இவ்வாறு முகவரி தரும் அவர்கள் வீடு உரிமையாளர்கள் திரும்பி வரும் வரை 24 மணிநேரமும் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்படும். அவர்களது உடமைகள் பாதுகாக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வீடுகள் தோறும் நோட்டீஸ் விநியோகித்து வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

The post திருமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி அறிவிப்பு: வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Thirumangalam ,Tirumangalam Nagar ,Taluka ,Austinpatti ,Koodakovil ,Sindhupatti ,Kallikkudi ,Women ,Tirumangalam Utkotam ,Madurai District ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...