×

பொள்ளாச்சி அருகே கார் மோதி ஐயப்ப பக்தர் பலி; 2 பேர் படுகாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதியதில் ஐயப்ப பக்தர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பூச்சனாரி அரண்மனை வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாலாஜி (20). அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் கவுதம் (20), சதீஷ் மகன் கவுதம் (19). இவர்கள் 3 பேரும் நேற்று சபரிமலை செல்வதற்கு தேவையான பொருட்கள் பொள்ளாச்சியில் வாங்கி விட்டு ஒரே பைக்கில் ஊர் திரும்பினர். மீன்கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளி அருகே செல்லும்போது, எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பைக் உருக்குலைந்து கிடந்தது.

தகவலறிந்த மேற்கு ஸ்டேஷன் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய மற்ற இருவரையும் மீட்டு, பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கோவை உப்பிலிப்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார் (40) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பொள்ளாச்சி அருகே கார் மோதி ஐயப்ப பக்தர் பலி; 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Pollachi ,Devotee ,Gopal ,Buchanari Palace Road ,Pollachi, Coimbatore ,Balaji ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...