×

ராஜஸ்தான் அமைச்சரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: காங். முறையீடு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜ ஆட்சி அமைத்து 25 நாள் இழுபறிக்குப் பின் அமைச்சரவை நேற்றுமுன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 22 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில், வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள கரண்பூர் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் சுரேந்திர பால் சிங் என்பவரும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரியை நேற்று சந்தித்த காங்கிரஸ் குழு, தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், வேட்பாளராக போட்டியிடும் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எனவே, அமைச்சர் சுரேந்திர பால் சிங்கை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

The post ராஜஸ்தான் அமைச்சரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: காங். முறையீடு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Congress ,Jaipur ,BJP government ,Surendra ,BJP ,Karanpur ,Minister ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க...