×

கார் மோதி பசுமாடு காயம்

 

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி-துரை தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று மாலை மதுரையை சேர்ந்த கரிபீரன் மகன் ஆனந்தகுமார் (45) என்பவர் சென்னை செல்வதற்காக அவரது காரில் மதுரையிலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சி பிரிவு சாலை அருகே, நெடுஞ்சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு திடீரென சாலையை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக கார் பசு மாட்டின் மீது மோதியது. அப்போது, பசு மாட்டிற்கு கால் முறிவு ஏற்பட்டு, உடலில் காயங்களும் ஏற்பட்டன. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கார் மோதி பசுமாடு காயம் appeared first on Dinakaran.

Tags : Karibeeran ,Anandakumar ,Madurai ,Chennai ,Trichy-Durai National Highway ,Duwarankurichi ,Trichy District ,Trichy-Madurai National Highway ,Duvarangurichi ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற...