×

திண்டுக்கல் மாவட்டத்தில் 9, 10ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், டிச. 31: திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்த பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

அதன்படி இத்திட்டத்தின் கீழ் பயன் பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கி கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களுடன், வருமான சான்று, சாதி சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்பிக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் 9, 10ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,District ,Boongodi ,Dinakaran ,
× RELATED மிரட்டும் கோடை வெயில்; மீண்டும் சூடு...