×

பிளஸ் 2 மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசி அருகே

வந்தவாசி, டிச.31: வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச்சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க வீட்டின் பின்புறமாக சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் மாணவியின் தந்தை பொன்னூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வழக்குப்பதிந்து வீட்டின் அருகே சென்ற மாணவியை மர்ம நபர்கள் யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

The post பிளஸ் 2 மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசி அருகே appeared first on Dinakaran.

Tags : Vasi ,Vandavasi ,Dinakaran ,
× RELATED (தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல்...