×

டிராக்டர் மோதி வியாபாரி பலி

திருத்தணி: திருத்தணி அடுத்த அகூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கரன் மகன் முருகன்(35). இவர் திருத்தணி பேருந்து நிலையத்தில் சமோசா வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வியாபாரத்திற்காக திருத்தணி பேருந்து நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேல் திருத்தணி அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post டிராக்டர் மோதி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Sankaran ,Murugan ,Agur Colony ,Tiruthani ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...