×

முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.61 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி

 

திருவாரூர்,டிச.30: திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் கூட்டத்தில் ரூ.61 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இதில் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், நில அளவீடு செய்தல் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

மேலும் கண் கண்ணாடி வாங்குவதற்காக ஒருவருக்கு ரூ ஆயிரத்து 500 மற்றும் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் இருவருக்கு ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ 61 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கிய நிலையில் பயனாளி ஒருவருக்கு இலவச வீட்டு மனை பட்டாவினையும் வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.61 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Collector ,Sarusree ,Tiruvarur district ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...