×

வை. ரயில் நிலைய சாலை சீரமைக்கும் பணி துவங்கியது

வைகுண்டம், டிச. 30: மழை வெள்ளத்தால் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்ட வைகுண்டம் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை, தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. வைகுண்டம் பகுதியில் கடந்த 17, 18ம் தேதி பெய்த கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகுண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த சாலையை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். 4 இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடுத்து சாலையை கடந்து வருவது கிராம மக்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. மேலும் 1 கிமீ தூரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு பொன்னங்குறிச்சி வழியாக சுமார் 8 கிமீ சுற்றிச்செல்ல வேண்டிய சூழல் நிலவியது. இதுகுறித்து தினகரனில் 28ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து வைகுண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வை. ரயில் நிலைய சாலை சீரமைக்கும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Vaikundam railway station ,Dhinakaran ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...