×

திருவனந்தபுரம் அருகே சகோதரிகளான 2 சிறுமிகள் பலாத்காரம் 88 வயது முதியவர் கைது

திருவனந்தபுரம், டிச. 30: திருவனந்தபுரம் அருகே நண்பரின் பேத்திகளான இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த 88 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே பாளையம்குன்னு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (88). இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். வாசுதேவன் வசிக்கும் அதே பகுதியில் அவரது நண்பரும் வசித்து வருகிறார். வாசுதேவன் அடிக்கடி தன்னுடைய நண்பரின் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வீட்டில் வாசுதேவனின் நண்பருக்கு 7, 4 வயதில் 2 பேத்திகள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிகளின் நடவடிக்கையில் ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர்களிடம் விசாரித்தபோது 2 பேரையும் வாசுதேவன் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனடியாக அயிரூர் போலீசுக்குத் தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது அக்கா, தங்கை 2 பேரையும் வாசுதேவன் பலமுறை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருவனந்தபுரம் அருகே சகோதரிகளான 2 சிறுமிகள் பலாத்காரம் 88 வயது முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Vasudevan ,Palayamkunnu ,Varkala ,Thiruvananthapuram district ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!