×

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆம்பூர் சிறுவன் உடல் உறுப்புகள் தானம்

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஆர்மாமலை கொல்லக்கொட்டாயை சேர்ந்தவர் சவுந்தரராஜன். விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது பிள்ளைகள் நித்யா, வெங்கடேஸ்வரன்(16) மற்றும் சந்தோஷ்(13). இதில், சந்தோஷ் அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 27ம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நாராயணகுப்பம் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தான்.

இதையடுத்து சந்தோஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்தனர். இதைத்தொடர்ந்து அவரது இதயம் மற்றும் அவரது 2 நுரையீரல்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்துக்கு ஒரு சிறுநீரகமும், கல்லீரல் மற்றும் கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆம்பூர் சிறுவன் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Ambur ,Vellore ,Soundararajan ,Armamalai Kollakkotta ,Ampur ,Tirupathur ,Thanalakshmi ,Nithya ,Venkateswaran ,Santhosh ,Santosh ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...