×

தேர்தல் வழக்குகளில் ஆஜராகாத பாஜக நடிகைக்கு கைது வாரண்ட்: உத்தரபிரதேச நீதிமன்றம் அதிரடி

ராம்பூர்: தேர்தல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை ஜெயபிரதாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த நிர்வாகியும், பாலிவுட் நடிகையுமான ஜெயபிரதா, கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிப்லியா மிஸ்ரா என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கெம்ரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்கண்ட இரண்டு வழக்குகளிலும் விசாரணை முடிந்த நிலையில், தற்போது எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவர் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் திவேதி கூறுகையில், ‘ஜெயபிரதாவுக்கு எதிராக இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை. பலமுறை வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிபதி அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தார். அதனால் வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் ஜெயபிரதா நீதிபதி முன் ஆஜராக வேண்டும். அவரை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் வழக்குகளில் ஆஜராகாத பாஜக நடிகைக்கு கைது வாரண்ட்: உத்தரபிரதேச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Uttar Pradesh Court ,Rampur ,Jaipratha ,Bollywood ,2019 Lok Sabha elections ,Uttar Pradesh Court of Action ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...