×

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் தயார்..!!

சென்னை: சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. தீவுத்திடலிலிருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள தொண்டர்கள் ‘கேப்டன் கேப்டன்’ என முழக்கமிட்டு செல்கின்றனர். கேப்டனுக்கு வீர வணக்கம் எனவும் முழக்கமிட்டபடி தொண்டர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் முடிந்துள்ள நிலையில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தர உள்ளனர். பாதுகாப்பு கருதி விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் 200 பேருக்கும் மட்டுமே காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விஜயகாந்தின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை மக்கள் காணும் வகையில் 8 LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் பெரிய LED திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

 

 

The post கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் தயார்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Coimbed Demudika Office ,Chennai ,Coimbed Demudika ,Coimbed Temudika Office ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது