×

அரசு பஸ் கவிழ்ந்து சென்னை மூதாட்டி பலி: 20 பயணிகள் காயம்

திருவெறும்பூர்: சென்னையிலிருந்து அரசு பஸ் கேரளா நோக்கி நேற்றிரவு புறப்பட்டது. இதில் 44 பயணிகள் இருந்தனர். பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த டிரைவர் அயூப்கான் ஓட்டினார். நள்ளிரவு 12.30 மணி அளவில் திருச்சி அருகே அளுந்தூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சென்னை அருகே குளத்தூர் டீச்சர் காலனி 9வது கிராசை சேர்ந்த மேரி அன்னாபாய்(80) அந்த இடத்திலேயே பலியானார். மேலும் 20 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த மணிகண்டம் போலீசார் பலியான மூதாட்டி உடல் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் கவிழ்ந்து சென்னை மூதாட்டி பலி: 20 பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvarumpur ,Kerala ,Ayufkan ,Kanyakumari ,Trichi-Chennai National Highway ,Alundur ,Trichy ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...