×

கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: போலீஸ் அறிவிப்பு

சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் அறிவித்துள்ளனர். ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவித்து வருகின்றனர். தேமுதிக அலுவலகம் அருகே கூடியிருக்கும் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க முக்கிய நபர்கள், உறவினர்கள் என 200 பேருக்கு மட்டுமே நல்லடக்க நிகழ்வில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதி அஞ்சலி செலுத்த விரும்பினால் உடனடியாக தீவுத்திடலுக்கு செல்லுமாறு மக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்துக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

The post கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: போலீஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Vijayakanth ,CHENNAI ,DMUD ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...