- முதல் அமைச்சர்
- மஞ்சூர், உப்பட்டி
- ஊட்டி
- நெல்லியாலம் நகராட்சி
- Pandalur
- கிளிகுண்டா நகராட்சி
- நீலகிரி
- மாவட்டம்
- கலெக்டர்
- அருணா
ஊட்டி,டிச.29: இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நெல்லியாளம் நகராட்சி (பந்தலூர்), கீழ்குந்தா பேரூராட்சியில் நடக்கிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டமானது பொது மக்களின் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்.நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டம் கடந்த 18ம் தேதி துவங்கியது. வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி வரை அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டமானது இன்று (29ம் தேதி) நெல்லியாளம் நகராட்சியில் (பந்தலூர்) வார்டு எண் 1,2,3,4,10,11 ஆகியவைகளுக்கு ஐஸ்வர்யா திருமண மண்டபம்,சேலக்குன்னா ரோடு,உப்பட்டியில் நடக்கிறது. கீழ்குந்தா பேரூராட்சியில் மஞ்சூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (அனைத்து வார்டுகள்) நடைப்பெறவுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டமானது நாளை (30ம் தேதி) குன்னூர் நகராட்சியில் வார்டு எண் (7,8,9,10,21,22,23,24) அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகம், சிம்ஸ்பார்க் மற்றும் ஓவேலி பேரூராட்சியில் சமுதாயகூடம், பாரதி நகர், சூண்டி (அனைத்து வார்டுகள்) நடைப்பெற உள்ளது. இவ்வாறு கலெக்டர் அருணா கூறியுள்ளார்.
The post மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் இன்று மஞ்சூர், உப்பட்டியில் நடக்கிறது appeared first on Dinakaran.