×

கிணற்றிலிருந்து ஆண் உடல் மீட்பு

துறையூர் அருகே செல்லிப்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் குணசேகரன்(49). இவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குணசேகரனை நேற்று முன்தினம் மதியம் முதல் காணவில்லை. இதனையடுத்து மருவத்தூர் பகுதியில் கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான வயலருகே குணசேகரனை பார்த்ததாக அவரைப் பார்த்தவர்கள் கூறியதால் துறையூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் துறையூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பாலசுந்தர் தலைமையில் வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி நீரில் மூழ்கி தேடினர். சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு குணசேகரனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு துறையூர் போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கிணற்றிலிருந்து ஆண் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Gunasekaran ,Chellipalayam Anna Nagar ,Satharyur ,Gunasekarane ,Kannadasan ,Maruvathur ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...