×

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பேராவூரணி , டிச.29: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (டிச.30) சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Peravoorani ,Sethubavasatram ,Electricity Board ,Setupavasatram ,
× RELATED பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்