×

ராஜபாளையத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

ராஜபாளையம், டிச.29: ராஜபாளையம் சிட்டி பேஸ்கட் பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைபந்து போட்டிகள் ஆனந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகளில் கோவை, மதுரை, தேனி, போடி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகளை சார்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள ஆனந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜூக்கள் கல்லூரி இரண்டு ஆடு களங்களில் காலை, மாலை என போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னாள் இந்திய கூடை பந்தாட்ட வீரர் ராமசுப்பிரமணிய ராஜா துவக்கி வைத்தார். முதல்நாள் நடந்த லீக் போட்டிகளில் தளவாய்புரம் தமிழ்த்தாய் அணியை சிவகாசி எமரால்டு அணி 61-46 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது.

மற்றோரு போட்டியில் இடைகால் ரூரல் அணியை சோழவந்தான் பிபிசி அணி 49-33 என்ற கணக்கில் வென்றது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்று நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.31 ஆயிரம் தொகையுடன் டிராபி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி ஏற்பாடுகளை ராஜபாளையம் சிட்டி பேஸ்கட் பால் கிளப் செய்துள்ளனர்.

The post ராஜபாளையத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Rajapalayam City Basketball Club ,Ananda Matriculation ,High School ,Coimbatore ,Madurai ,Theni ,Bodi ,Sengottai ,Dinakaran ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!