- தூத்துக்குடி
- தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
- தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக கூட்டாட்சி
- தின மலர்
தூத்துக்குடி, டிச. 29: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சரக கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கான செயலர்கள்- மேலாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகையை பாதுகாப்பாக எடுத்து செல்வது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூடுதல் பதிவாளர் சிவ முத்துக்குமாரசாமி தலைமை வகித்து அறிவுரைகளை வழங்கினார். இதில் தூத்துக்குடி மண்டல இணை பதிவாளர் முரளிகண்ணன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் -செயலாட்சியர் நடுக்காட்டுராஜா மற்றும் பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சுப்புராஜ், தூத்துக்குடி சரக துணை பதிவாளர் ரவீந்திரன், திருச்செந்தார் சரக துணை பதிவாளர் மாரியப்பன், டான்பெட் திருநெல்வேலி துணை பதிவாளர் காந்திராஜ் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவு செயலர்கள்-மேலாளர்கள் ஆய்வு கூட்டம் நிவாரண தொகையை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல அறிவுரை appeared first on Dinakaran.