×

பைக் திருடிய முதியவர் கைது கண்ணமங்கலம் போலீசார் அதிரடி பல்வேறு இடங்களில் கைவரிசை

கண்ணமங்கலம், டிச.28: கண்ணமங்கலத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் கண்ணமங்கல் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஏரியூர் கிராமத்தை சேர்ந்த காந்தி (67) என்பதும், இவர் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், அவரிடமிருந்த 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவரை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். நகை, பைக் திருட்டு என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்ணமங்கலம் போலீசார் அதிரடியாக கைது செய்து வருவதற்கு எஸ்பி கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post பைக் திருடிய முதியவர் கைது கண்ணமங்கலம் போலீசார் அதிரடி பல்வேறு இடங்களில் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Vellore district ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!