×

செங்கோட்டை அருகே பெண் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயன்றவர் கைது

செங்கோட்டை,டிச. 28: செங்கோட்டை அடுத்த புளியரை அருகே அமைந்துள்ள லாலா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினருடன் பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த சக்திராஜ் வேண்டுமென்றே அந்த பெண் மீது பைக்கை மோதி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் புளியரை சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் விசாரணை நடத்தி சக்திராஜை கைது செய்தனர்.

The post செங்கோட்டை அருகே பெண் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sengkot ,Sengkottai ,Shaktraj ,Lala ,Puliar ,Semangot ,Dinakaran ,
× RELATED 8 மணி நேரம் ஒரே இடத்தில் நின்ற யானை உயிரிழப்பு