×

22 வங்கி கடன் வழக்குகளுக்கு சமரசம்

ராசிபுரம், டிச.28: தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு, சென்னை உத்தரவின்படியும், நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைகுழுவின் தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் உத்தரவுபடியும், ராசிபுரம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி தீனதயாளன் வழிகாட்டல்படி, நேற்று கனரா வங்கியின் கடன் வழக்குகளுக்கு சமரச தீர்வுகான மக்கள் நீதிமன்றம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. இதில், சுமார் 22 வங்கி கடன் வழக்குகளுக்கு சமரசமாக தீர்வு காணப்பட்டது. இதில், ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்குமார், வழக்கறிஞர்கள் ஜெயராஜ் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராய் பங்கு பெற்று, வங்கி கடன் வழக்குகளை சமரசமாக தீர்வுக்கான செய்தனர். இதில், 22 வழக்குகளுக்கு சுமார் ₹17,68,750 தொகை தீர்வு காணப்பட்டது.

The post 22 வங்கி கடன் வழக்குகளுக்கு சமரசம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Tamil Nadu Legal Services Commission ,Chennai ,Namakkal District Legal Services Commission Chairman District ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...