×

ராமர் கோயில் திறப்பு விழா மம்தா பங்கேற்கமாட்டார்: திரிணாமுல் மூத்த தலைவர் தகவல்

கொல்கத்தா: அயோத்தியில் அடுத்தமாதம் 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிகேஷகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜியோ அல்லது அரசின் சார்பில் பிரதிநிதியோ பங்கேற்க மாட்டார்கள். மேலும், கட்சி சார்பில் பிரதிநிதி யாரும் பங்கேற்க மாட்டார்கள். மதத்துடன் அரசியலை கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார்’’ என தெரிவித்தன. இதே போல் இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்காது என அந்த கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

The post ராமர் கோயில் திறப்பு விழா மம்தா பங்கேற்கமாட்டார்: திரிணாமுல் மூத்த தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mamata ,Ram temple ,Trinamool ,Kolkata ,Kumbabhishekam ,Ayodhya ,Modi ,UP ,Chief Minister ,Yogi Adityanath ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...