×

வாடிப்பட்டியில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

வாடிப்பட்டி, டிச. 27: வாடிப்பட்டியில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் முதல்வர் அறிவித்த மக்களுடன் முதல்வர் முகாம் மூலம் அரசின் அனைத்து துறையினரும் பங்குபெறும் முகாம்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் நடைபெறுகின்றன. இம்முகாம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி பேரூராட்சியில் நாளை நடைபெறுகிறது. தாதம்பட்டி மந்தைத் திடல் அருகிலுள்ள தனியார் மகாலில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு வெங்கடேசன் எம்எல்ஏ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். இம்முகாமில் மின்வாரியம், வருவாய்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூகநலத்திட்ட அதிகாரிகள், கூட்டுறவுதுறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். பொது மக்கள் தங்கள் கோரிக்கைக்கேற்ப அதற்குரிய ஆவணங்களுடன் பங்கேற்றால் முகாமிலேயே பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டு உடனடியாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

The post வாடிப்பட்டியில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Wadipatti ,Wadipatty ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...