×

மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

நாமகிரிப்பேட்டை, டிச.27: நாமகிரிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, கண்ணன், குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சின்னசாமி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சபாபதி, நிர்வாகிகள் ரமேஷ்குமார், கதிரேசன், குமரேசன், கந்தசாமி, குபேந்திரன், கவியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், நாமகிரிப்பேட்டை அடுத்த பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தின் வழியாக செல்லும் ஓடுவன்குறிச்சி முதல் தொ.ஜேடர்பாளையம் வரையிலான ஊராட்சி ஒன்றிய சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையூராக உள்ள சாலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

The post மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist ,Namakrippet ,Marxist Communist Party ,District Secretary ,Kandaswamy ,Dinakaran ,
× RELATED கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும்...