×

கழிவு நீர் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில்,கழிவு நீர் கால்வாயில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள விநாயகர் கோயில் அருகில் கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? யாரேனும் அவரை கால்வாயில் தள்ளிவிட்டுச் சென்றனரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கழிவு நீர் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Vinayagar Temple ,Vedachalam Nagar… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில்...