*பொதுமக்கள் கோரிக்கை
சோளிங்கர் : சோளிங்கர் பஸ் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வாலாஜா செல்லும் சாலையில் சினிமா தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும், குடிமகன்கள் இந்த கடையில் மதுபானங்களை வாங்கி அருகில் உள்ள இந்திரா நகர் முதல் தெரு குடியிருப்புக்கு செல்லும் தெரு நெடுகிலும் சாலையின் நடுவில் அமர்ந்து கொண்டு மது குடிக்கின்றனர். அவ்வாறு குடிக்கும் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை தெருவிலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியினர் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் சோளிங்கர் எம்எல்ஏவிடமும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இதுவரை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மாற்றவில்லை. எனவே குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.