×

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 

ஊத்துக்கோட்டை, டிச. 25: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் மாமண்டூர் கிராமம் உள்ளது. இங்கு, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக நண்பர்கள் குழு சார்பில் நேற்றுமுன்தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீராமு தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் குணசேகரன், வார்டு உறுப்பினர் சித்ரா மதனகோபால் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக விஸ்வநாதன், கண்ணன், திவ்யா ஆகியோர் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, கோதுமை, எண்ணெய் போன்ற பொருட்களை வழங்கினர்.

The post புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Mikjam ,Boondi Union Mamandur ,Oothukottai ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...