×

ஜெயங்கொண்டம் பகுதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஜெயங்கொண்டம்,டிச.25: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர், திருத்துளார் அருளுடைய நாதர்.வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதாரரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், பாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர் உள்ளிட்ட சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஜெயங்கொண்டம் கழுமாலைநாதர் கோயிலில பிரகார உலா நடைபெற்றது.

ஆண்டிமடம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை அறம் வளர்த்த நாயகி தர்ம சம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கோயில் முன்புள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம்-விளந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் திருக்களம்பூர் திருக்கோடி வனத்தீசுவரர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், விளந்தை அழகு சுப்பிரமணியர் ஆகிய கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் நந்தி பகவானை வழிபாடு செய்தனர்.

The post ஜெயங்கொண்டம் பகுதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Pakudisivan ,Jayankondam ,Shivan Temples ,Pakudisivan Temples ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...