×

அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி மாரடைப்பால் பலி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பூரிகமானிமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(74), விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு நாகராஜ், சேகர், ராஜா, என 3 தம்பிகள் உள்ளனர். அனைவரும் அதே ஊரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி, வயது முதிர்வு காரணமாக கடந்த 22ம் தேதி இறந்துவிட்டார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகள் செய்தபோது, அண்ணனின் சடலம் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த கடைசி தம்பியான ராஜா(55) துக்கம் தாங்க முடியாமல் சடலத்தின் அருகே அமர்ந்து கதறி அழுது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதை தொடர்ந்து அண்ணன், தம்பி என இருவரது சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டது.

The post அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி மாரடைப்பால் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Subramani ,Purikamanimita village ,Jolarpet ,Tirupathur district ,Nagaraj ,Shekar ,Raja ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...