×

கொள்ளிடத்தில் முதலமைச்சரின் கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கொள்ளிடம்,டிச.24: கொள்ளிடத்தில் முதலமைச்சரின் கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சீர்காழி சபாநாயகர் முதலியார் மேல்நிலைப்பள்ளியில் தாலுகா அளவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற ஆங்கிலம், எழுதுதல் கவிதை எழுதுதல், நாடக போட்டி, நடனமாடுதல், தனி நடனம் மற்றும் குழு நடனம், தமிழ் பேச்சு போட்டி உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் சீர்காழி தாலுகா அளவில் சேத்திருப்பு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் மூன்றாம் இடத்தில் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் முன்னிலை வகித்தார்.
விழாவில் கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி பேசினார். ஆசிரியர்கள்சந்திரன், கணேசன், சுந்தரி தன்னார்வலர் விஷாலினி, கொள்ளிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி பேசுகையில், முதல்வரின் இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்த முடிகிறது. கலைத் திருவிழாவில்மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடன்கலந்துகொண்டுவெற்றி பெற்று வருகின்றனர். மேலும் இதன்மூலம் மாணவர்களின் பள்ளி வருகை மேன்மைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.

The post கொள்ளிடத்தில் முதலமைச்சரின் கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister's art festival ,Kollid ,Kollidam ,Mayiladuthurai ,Chettirupu ,
× RELATED மே தினத்தை முன்னிட்டு 2 மணி நேர தொடர் சாதனை சிலம்பாட்டம்