×

வாலிபரை தாக்கிய மர்ம கும்பல்

சிவகாசி, டிச. 24: சிவகாசி அருகே மேலநிறைமதியை சேர்ந்தவர் ஆண்டவர் (25). இவர் சம்பவத்தன்று தனது அக்காவுக்கு சொந்தமான தோட்டத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் ஆண்டவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ஆண்டவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post வாலிபரை தாக்கிய மர்ம கும்பல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Andavar ,Melanimati ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை