×

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

ஊட்டி, டிச.24: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் நேற்று காலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊட்டி அருள்மிகு வேணுகோபால சாமி திருக்கோயில், சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ஏகாதசி திருவிழா கடந்த வாரம் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 5.30 மணிக்கு ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர், சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இதில், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நேற்று காலை முதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

The post வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi ,Perumal ,Nilgiri district ,
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை